ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பற்றி அனேகம் பேருக்குத் தெரிந்திருக்கும். அப்படித் தெரிந்தவர்களுக்கு THE SCHOOL பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இந்தியா முழுதும் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் அவர்களின் பள்ளி, சென்னையிலும் அடையாறில் இருக்கிறது. இந்த பள்ளி இப்போது மூடும் அபாயத்தில் இருக்கிறது.
இந்த பள்ளி தற்போது இயங்கி வரும் இடம் தியசாஃபிகல் சொசைட்டிக்கு சொந்தமானது. கிட்டதிட்ட 17 ஏக்கர். இதை 1979ஆம் வருடம் தியாசாஃபிகல் சொசைட்டி THE SCHOOLக்கு லீஸுக்குத் தந்தது. இப்போது அந்த இடத்தை காலி செய்யும் படி பணித்திருக்கிறது, தியசாஃபிகல் சொசைட்டி. பல கட்ட பேச்சு வார்த்தைக்குப் பின் பயனின்றி - இப்போது வேறு இடத்திற்கு நகர்வது அல்லது மூடுவது என்ற நிலையில் உள்ளது. 2016 வரை இதே இடத்தில் இயங்க முடியும். அதற்குள் வேறு இடம் பார்த்துவிடுவது சாத்தியமே. சென்னைக்கு 80 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் ”பாடஷாலா” என்ற அவர்களது உறைவிட பள்ளிக்கு இந்த மாணவர்கள் செல்வது ஒரு option.
இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்கனவே பெற்றோர்கள் சிலர் சேர்ந்து Facebook பக்கம் ஒன்றைத் தோற்றுவித்திருக்கின்றனர்.
ஆனால், என் முக்கிய கவலை நான் சமிபத்தில் அறிந்த ஒரு தகவல் - சென்னையின் முதல் குடும்பம் இந்த பள்ளியை தன் வசப்படுத்திக் கொள்ள முணைந்திருப்பதாக அறிகிறேன். எந்த அடிப்படையில் இப்பள்ளியை தனி நபர் வசப்படுத்திக்கொள்ள முடியும்? அதற்கு Foundation-இன் பதில் என்னவாக இருக்கும்? என்பது குறித்த கேள்விகளுக்கு ஊகங்களல்லாத தீர்மாணமான உண்மையின் அடிப்படையிலான பதில் இல்லை. இது செவி வழிச் செய்தியே. இந்த செய்தி ஒரு வேளை உண்மையாகயிருப்பின், மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த பள்ளி (முதல் குடும்பமென்றில்லை) எந்த ஒரு தனி நபரின் கைக்கும் சென்று விடாமல் இருக்க வேண்டும். அப்படி ஆனால், இன்றைய தேதியில் சென்னையிலிருக்கும் பல தரமற்ற, வெறும் கூலிக்கு மாறடிக்கும் கூட்டத்தை உருவாக்கும், பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பள்ளி நிறுவனங்களுள் இதுவும் ஒன்றாக மாறி விடும் அபாயம் இருக்கிறது.




One response to “The School - KFI மூடும் அபாயம்”
அதிர்ச்சி அளிக்கும் செய்தி..
Post a Comment
Trackbacks
Leave a trackback